சீனாவில் வைத்தியசாலை மற்றும் தொழிற்சாலை ஆகிய இடங்களில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பீஜிங்கின் பெங்டாய் மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலையில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுமார் 2 மணி நேரம் நடந்த மீட்பு பணியில் 71 நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டு, வேறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனையடுத்து, ஜெஜியாங் மாகாணம் ஜின் ஹவா நகரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
மரக் கதவுகள் தயாரிக்கப்படும் பகுதியில், பெயிண்ட் உள்ளிட்ட மூலப்பொருட்களால் தீ பரவியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.