வெளிநாடு | சமூக வாழ்வு | 2023-04-14 05:07:04

கத்தாரில் இலங்கை மூத்த கவிஞரை சந்தித்த எழுத்தாளர் குழு

(எம்.என்.எம்.அப்ராஸ்)

கத்தார்  நாட்டிற்கு வருகை தந்திருக்கும்  இலங்கை மூத்த கவிஞர்   காப்பியக்கோ, ஜின்னா சரிபுத்தீன் அவர்களை ஸ்கை தமிழ் பணிப்பாளர் ஜே.எம்.பாஸித், ஊடகவியலாளர் பிஸ்ரின் மொஹமட்,இந்தியாவைச் சேர்ந்த கவிஞர் தஞ்சாவூரான் ஆகியோர்  (12)சந்தித்தனர்.

இந்த சந்திப்பில் கத்தாரில் உள்ள தமிழ் பேசும் எழுத்தாளர்கள் இலக்கியவாதிகள் அனைவரையும் ஒன்று சேர்த்து கவியரங்கு மற்றும் விருது விழா என்ன பல நிகழ்ச்சி திட்டங்களை கத்தாரில் நடத்துவதற்கு கலந்து ஆலோசிக்கப்பட்டது.

இதில் குறிப்பாக இலங்கை மற்றும் இந்தியா வாழ் தமிழ் உறவுகளை ஒன்றிணைத்து இலக்கிய செயற்பாடுகளை மேற்கொள்ள உள்ளதாகவும் முக்கியமாக இந்த சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts