வெளிநாடு | சமூக வாழ்வு | 2023-02-26 07:15:34

துருக்கி - சிரியா நிலநடுக்கம் : பலியானோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது!

துருக்கி, சிரியாவில் கடந்த 6-ம் திகதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், இரு நாடுகளிலும் பெரும் சோக சுவடுகளை ஏற்படுத்தியுள்ளது. 

ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்துள்ளன. கட்டிட இடிபாடுகளில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டன. 

இந்நிலையில், துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது. 

சுமார் 1.60 லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. 5.20 லட்சத்துக்கும் அதிகமான அடுக்குமாடி குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. 
துருக்கியின் தென் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல நகரங்கள், கிராமங்கள் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளது.


Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts