மத்திய துருக்கியில் இன்று ரிக்டர் அளவுகோலில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
கடந்த 66 மணித்தில் மத்திய துருக்கியில் உணரப்பட்ட 37வது நிலநடுக்கம் இதுவாகும் என ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.
கடந்த 6ஆம் திகதி துருக்கி – சிரியா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பேரழிவிற்குள்ளான நிலநடுக்கத்தை தொடர்ந்து குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.