கல்வி | கல்வி | 2023-10-07 02:04:01

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு விழா!

(எஸ். சினீஸ் கான்)

பட்டியடிப்பிட்டி அக்/அர்-றஹீமியா வித்தியாலயத்தின் 2022 ம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசில் வழங்கலும் கௌரவிப்பும் பாடசாலையின் அதிபர் திருமதி பரீதா நிப்றாஸ் தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் வியாழக்கிழமை (5) நடைபெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று வலயக்கல்வி பணிப்பாளர் அஷ்ஷேய்க் ஏ.எம். றஹ்மதுல்லாஹ் மற்றும் வலயக்கல்வி பணிமனையின் உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.

மேலும், வெகு விமர்சையாக நடைபெற்ற இந் நிகழ்வுக்கு பாடசாலை பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனுசரணை வழங்கினர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts