கல்வி | கல்வி | 2023-08-15 08:07:52

மருதமுனை அல்-ஹம்றாவில் மாணவ தலைவர்களுக்குசின்னம் சூட்டும் நிகழ்வு

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலய மாணவ தலைவர்களுக்கான நியமன கடிதம் மற்றும் சின்னம் சூட்டும் நிகழ்வு என்பன பாடசாலையின் அதிபர் எம்.எம்.முஹம்மட் நியாஸ் தலைமையில்  (14) நடைபெற்றது

இதில் பொத்துவில் மாவட்ட நீதிபதி ஏ.சி.எம்.றிஸ்வான் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு சின்னம் சுட்டி வைத்ததோடு, நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் விழிப்புணர்வு உரையையும் நிகழ்த்தினார். இந்த நிகழ்வில் பெரியநீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.எஸ்.கே.வீரசிங்க, கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.றியாஸா, பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எம்.பி.எம்.நஜீம், பிரதி அதிபர் எம்.ஏ.எம்.இனாமுள்ளா, பாடசாலையின் அபிவிருத்தி சங்க பொதுச்செயலாளர் பி.எம்.நஸ்றுத் தீன், பழைய மாணவர் சங்க செயலாளர் எம்.என்.எம்.வசீம், முன்னாள் அபிவிருத்தி சங்க செயலாளர் நளீம் எம்.பதுருதீன் உட்பட அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், அபிமானிகள், ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் போது பழைய மாணவர் ஐ.எம்.சிமாம் பாடசாலைக்கு கணினி மற்றும் வெண் பலகை என்பவற்றை அன்பளிப்பாக வழங்கி வைத்தார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts