கல்வி | கல்வி | 2023-07-29 14:34:34

மாணவத்தலைவர்களுக்கான ஒருநாள் தலைமைத்துவப் பயிற்சி செயலமர்வு!

புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையின் கீழ்
மாணவத் தலைவர்களுக்கான ஒருநாள் தலைமைத்துவப் பயிற்சி செயலமர்வு வியாழன்

( 27.07.2023 ) மருதமுனை கலாசார மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

கலாசார மத்திய நிலையத்தின் வருடாந்த முன்னேற்ற வேலைத்திட்டங்களில் ஓர் நிகழ்வாக மருதமுனை  ஷம்ஸ் மத்திய கல்லூரியின் மாணவத்தலைவர்களுக்கு தலைமைத்துவ நடைமுறைகள்,செயற்பாடுகளின் அவசியம் பற்றியதான செயலமர்வினை பிரதான வளவாளராக கலந்துகொண்டு கே.எம்.தமீம் ஆசிரியர்(கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை)அவர்களால் நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இஸ்லாத்தின் பார்வையில் தலைமைத்துவம் எனும் தலைப்பில் அஷ் ஷெய்க் எம்.ஐ.எம்.ஜிபான்(மதனி) தாருல் ஹுதா விரிவுரையாளர் நிகழ்த்தினார்.

இந்நிகழ்வின் பிரதம அதிதிகளாக,பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி (பிரதேச செயலகம் கல்முனை), அதிபர் எம்.எம்.ஹிர்பஹான் (ஷம்ஸ் மத்திய கல்லூரி) பிரதி அதிபர் எச்.எம்.நியாஸ்
(ஷம்ஸ் மத்திய கல்லூரி) ,ஒழுக்கட்டுப்பாட்டு சபை தலைவர் , மத்திய கலாசார,உத்தியோகத்தர்

எஸ்.அகீலா பாணு (அபிவிருத்தி உத்தியோகத்தர்),ஏ.ஜீ.சித்தி பாஜியா(அபிவிருத்தி உத்தியோகத்தர்) ,எம்.ஏ.எம்.ஹைதர் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts