-எமது நிருபர்-
சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட இறக்காமல் அமீர் அலிபுர வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட வித்யாரம்ப நிகழ்வு பாடசாலையின் அதிபர் எம்.எஸ் லாஹிர் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
கல்வித் தேனெடுக்க நம் சோலை நாடிய மாணவ பட்டாம்பூச்சிகளை மாலையிட்டு வரவேற்று இனிப்பு பரிசுகள் வழங்கி புத்தரிசியில் வலக்கரம் பிடித்து அகரம் எழுதி பாடசாலைக்கு மாணவர்கள் வரவழைக்கப்பட்டார்கள்
இந்த நிகழ்வுக்கு சம்மாந்துறை வலய கோட்டக்கல்வி அதிகாரி முஹம்மது லெப்பை பிரதம அதிதியாக கலந்து கொண்டார். விசேட அதிதிகளாக ஆசிரியர் ஆலோசகர்களான எஸ்.எல்.ஏ. முனாப், ஐ.எல்.றசீன் மெளலவி ஆகியோரும் கலந்து கொண்டனர். முதல் நாள் பாடசாலைக்கு புதிய மாணவர்களை வரவேற்கும் இந்த நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர், ஆசிரியர்கள், பாடசாலையின் அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.