ஏ.பி.எம்.அஸ்ஹர்
தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாச்சார பீடத்தின் பீடாதிபதியாக சமூகவியல் துறையின் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி றமீஸ் அபூபக்கர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை, கலாச்சார பீடத்தின் பீடாதிபதிக்கான தேர்வு இன்று (11) வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கூடுதல் வாக்குகளைப் பெற்று பீடாதிபதியாக சிரேஷ்ட விரிவுரையாளர்
கலாநிதி றமீஸ் அபூபக்கர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வரலாற்றில் கலை, கலாச்சார பீடத்தின் பீடாதிபதியாக இள வயதில் தெரிவு செய்யப்பட்ட இளம் பீடாதிபதி எனும் கெளரவத்தை இவர் இதன் மூலம் பெற்றுள்ளார்
சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் கலாநிதிபட்டத்தை சிங்கபூர் தேசிய பல்கலைக்கழகத்தில் பூர்த்தி செய்துள்ளமையும் குறிப்படத்தக்கது.தேசிய மற்றும் சர்வதேச ஆராய்ச்சி மற்றும் நல்லிணக்கம் தொடர்பான மாநாடுகளிலும் இவர் பங்கு பங்குபற்றியுமுள்ளார்.