கல்வி | கல்வி | 2023-01-20 15:05:19

ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் பணி நயப்பு விழா

(எஸ்.அஷ்ரப்கான்)

அன்மைக்காலமாக  சகல துறைகளிலும் பல்வேறு சாதனைகளை நிலை நாட்டி வரும் அம்பாறை மாவட்டம்  ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலத்தின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றிய பல் துறை சார்ந்தோரை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு பாடசாலையில் (19) இடம்பெற்றது.

இச்சிறப்பு விழா ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் ஓய்வு பெற்று சென்ற ஆசிரியர்கள் மற்றும் இடமாற்றம் பெற்றுச் சென்ற பிரதி அதிபர்கள் ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்களுக்கான பணி நயப்பு விழா அதிபர்  அஷ்-ஷெய்க் யு.கே.அப்துர் ரஹீம் தலைமையில் பாடசாலை அஷ்ரப் ஞாபகார்த்த மண்டபத்தில்  நடைபெற்றது.

ஓய்வு பெற்றுச் சென்ற ஆசிரியர்களான ஈ.எல். மன்சூர்,எஸ்.எல்.ஜஹ்பர் ஆகியோரும், அதிபர் சேவையிலிருந்து இடமாற்றம் பெற்றுச் சென்ற ஏ.எல்.எப்.டில்ஸா ரோஸ், எம்.ரி.ஸியாத் ஆகியோரும், இடமாற்றம் பெற்றுச்சென்ற ஆசிரியர்களான எம்.வி. முபாரக், ஏ.ஏ.பர்சானா,  யு.எல்.ஏ.மஜீத்,எம்.ரி. பஸ்லி, எம்.எஸ்.நிஹால் முஹம்மட், எம்.பி.எஸ்.எப். ஸிபா,எஸ்.ஆர்.எம்.தஸ்லீம்,ஏ.எல்.றுமைஸா, ஏ.எல். தெளபீக், இஸட்.எம். நிலாம் ஆகியோரும்,

இடமாற்றம் பெற்றுச் சென்ற கல்வி சாரா ஊழியர்களான எஸ்.அபூபக்கர், ஐ.ஏ.ஸிராஜ்,வை.வி. றிஸ்வி, ஏ.எம்.அஸ்ஹர் ஆகியோரும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்    பட்டார்கள். நிகழ்ச்சிகளை அறிவிப்பாளர், ஆசிரியர் ஜே.வஹாப்தீன் தொகுத்து வழங்கினார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts