சர்வதேச முதியோர் தினத்தினை முன்னிட்டு முதியோர்களுக்கான தேசிய சபையினால் ஏற்பாடு செய்யப்படடிருந்த பாடசாலைகளுக்கிடையிலான ஆக்கத்திறண் போட்டியில் மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலயத்தினைச் சேர்ந்த செல்வி எம். என். அன்மா அபாப் எனும் மாணவி சான்றிதழ் - தனிப் பிரிவில் வெற்றிபெற்றுள்ளார்.
"முதியோர்களான உங்களுக்கு சிறந்த இடத்தினை வழங்கும் நாளைய தினத்தினை நோக்கி" எனும் தொனிப்பொருள் தாங்கிய கட்டுரை வரைதல் நிகழ்விலேயே குறித்த மாணவி இவ் வெற்றியினைப் பெற்றுள்ளார்.
இம் மாணவிக்கான வெற்றிச் சான்றிதழும் பரிசுத் தொகையாக 10000/=வும் கடந்த ஒக்டோபர் 01, 2019 சர்வதேச முதியோர் தினத்தன்று வழங்கிவைக்கப்பட்டது.