கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியநீலாவணை புலவர்மணி சரிபுத்தின் மஹா வித்தியாலய மாணவி குர்ரத்துல் ஐன் (தரம் - 06) மாகாண மட்ட ஜூனியர் ஒலிம்பியாட் விஞ்ஞானப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று தேசிய மட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். என பாடசாலையின் அதிபர் எம்.எம்.முஹம்மட் நியாஸ் தெரிவித்தார்.
பாடசாலைக்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ள இந்த மாணவியை பாடசாலை சமூகம் பாராட்டியுள்ளது.
அத்துடன் மாணவியை பயிற்றுவித்த விஞ்ஞானப் பாட ஆசிரியை திருமதி.பர்வின் ஜஹான் சுஐம், ஹம்மட் நியாஸ், பிரதி அதிபர் எம்.சி. நஸார் மற்றும்
ஏனைய விஞ்ஞானப்பாட ஆசிரியர்களுக்கும் ஏனைய ஆசிரியர்களுக்கும் பாடசாலை சமூகம் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளது.