கல்வி | கல்வி | 2019-05-11 05:50:12

மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலய மாணவர்கள் இருவருக்கு தேசிய மட்டப்போட்டியில் தங்கப்பதக்கம்.

(பி.எம்.எம்.ஏ.காதர்)  

மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலய மாணவர்கள் இருவர் அகில இலங்கை சமூக விஞ்ஞானப் போட்டியில் தேசிய மட்டத்தில் முதலாம் இடங்களைப் பெற்று தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

6ஆம் தரத்தில் கற்கும் மாணவி முகம்மது வலீத் பாத்திமா ஜெஸ்னா,7ஆம் தரத்தில்; கற்கும் சுஐப்தீன் முகம்மட் அபாப் ஆகியோரே தங்கப்பதக்கத்தைச் சுவீகரித்துக் கொண்டவர்களாவர்.  

இதே போட்டியில் இப்பாடசாலையில் 7ஆம் தரத்தில் கற்கும் மாணவர்களான முகம்மது பைசால் ஆதில் அம்மார்,அப்துல் சமது ஹயானி ஆகியோர் 7ஆம்,8ஆம்.இடங்களையும் பெற்றுள்ளனர். 

இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும்,பயிற்றுவித்த  ஆசிரியர்களுக்கும்.பிரதி அதிபர்களுக்கும்,முன்னாள் அதிபர் ஏ.குனுக்கத்துல்லாவுக்கும்;  தற்போதய அதிபர் ஐ.உபைதுல்லா பாரட்டுக்களையும்.வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts