நாட்டிலுள்ள சகல அரச பாடசாலைகளும் நாளையும், நாளை மறுதினமும் நடைபெற மாட்டாதென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இன்று நாட்டில் இடம்பெற்ற தொடர் வெடிப்புச் சம்பங்களை கருத்தில் கொண்டு பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக நாளைய தினம் அரச பாடசாலைகள் திறக்கப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.