(எம்.என்.எம்.அப்ராஸ்)
கல்முனை / அல்-மிஸ்பா மகா வித்தியாலயத்தின் மாணவத்தலைவர்களுக்கான சத்தியபிரமாண நிகழ்வு பாடசாலையின் ஒழுக்காற்று சபை தலைவர் ஆசிரியர்
அலியார் றிபான் தலைமையில் நேற்று (11) பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாக கல்முனை மாநகர சபைஉறுப்பினறும் நகரதிட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி கல்வி அமைச்சின் இணைப்பு செயலாளர் ரஹ்மத் மன்சூர் கலந்து கொண்டார்
மேலும் இந் நிகழ்வில் கெளரவ அதிதியாக பாடசாலையின் அதிபர் திருமதி எம்.எச்.எஸ்.ஆர்.மஜீடியா , கணக்காளர் எஸ்.எல். சஜிதா பர்வின் ,அவர்களும் விசேஷட அதிதியாக பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் எஸ்.எச்.ஏ.நிஹார் மற்றும் உதவி, பிரதி அதிபர்கள் ,ஆசிரியகள் ,மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர் .