கிழக்கு மாகாணத்தின் முதல் தங்கப்பதக்க சாதனையாளரானார் மருதமுனை வைத்தியர் எம்.இஸட்.எம்.சப்றாஸ்
மருதமுனையை சேர்ந்த டாக்டர் எம்.இஸட். முஹம்மட் சப்றாஸ் என்பியல் சத்திர சிகிச்சை நிபுணருக்கான கற்கை நெறியின் இறுதிப் பரீட்சையில் (MD orthopedic surgery part –II) கிழக்கு மாகாணத்தின் முதல் தங்கப்பதக்க சாதனையாளராக தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார்.
இக்கற்கை நெறியில் கிழக்கு மாகாணத்தில் இது வரைக்கும் யாரும் சித்தியடைந்திருக்கவில்லை என்பதோடு, கிழக்கு மாகாணத்தில் முதலாவது தடவையாக சித்தியடைந்த இருவரில் ஒருவரானது மாத்திரமன்றி ,இக் கற்கை நெறியின் இறுதியிப் பரீட்சையில் ஒருவருக்கு மாத்திரம் வழங்கப்படும் தங்கப்பதக்கத்தையும் தனதாக்கி சாதனை படைத்து தான் பிறந்த மருதமுனைக்கும் தன்னை ஈன்றெடுத்த பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளமை மன மகிழ்வைத் தருகிறது.
மருதமுனைக்கு இப்பெருமையை ஈட்டித்தர நாடிய எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு கண் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு , இதற்கு உறுதுணையாகவும் பக்க பலமாகவும் இருந்த அவரது பெற்றோருக்கும் அவரது மனைவி மற்றும் உறவுகளுக்கும் நன்றிகள்
இவரது சேவை நீடித்த சேவையாக அமைய www.tmnews.lk இணையத்தள சேவை பிராத்திப்பதோடு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது..
அடுத்த தலைமுறையை நோக்கிய பயணம்... TM NEWS