(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
பெரியநீலாவணை புலவர்மணி சரிபுத்தீன் மஹா வித்தியாலயத்தில் மாணவத் தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு இன்று (20) பாடசாலையின் அதிபர் எம்.எம்.எம்.நியாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக சட்டத்தரணி எம்.ஏ.எம்.முபீத் கலந்து கொண்டார். கௌரவ அதிதியாக அத்னான் டெக்ஸ் உரிமையாளர் ஏ.எம். முஸ்தகீன் கலந்து சிறப்பித்தார்.
இந்த நிகழ்வில் பாடசாலையின் உதவி அதிபர் எம்.சி.நஸார், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், அபிவிருத்திக் குழு உறுப்பிர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.