(எம்.என்.எம்.நாஜித்)
கமு/கமு/ புலவர்மணி சரிபுதீன் மஹா வித்தியாலய பழைய மாணவர்களின் ஒன்றுகூடல் பாடசாலையின் பிரதி அதிபர் எம்.சீ.ஏ. நஸார் அவர்களின் தலைமையில் இன்று 2019.02.19ஆம் திகதி பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.
பாடசாலை தொடர்பான பல விடயங்கள் இங்கு கலந்துரையாடபட்டதோடு பாடசாலை அபிவிருத்திச் சபைக்கான அங்கத்தவராக பழைய மாணவர் சார்பாக எம்.சீ.ஏ. மபாஸ் ஆசிரியரும் எம்.எஸ்.எம். சப்ரீன் (சமுதாயம் சார் சீர்திருத்த அதிகாரி) அவர்களும் தெரிவு செய்யப்பட்டார்.
இந்த ஒன்று கூடலில் பழைய மாணவர்கள் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் வெளியான மாணவர் வகுப்பிலிருந்து ஒருவர் வீதம் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.