கல்வி | கல்வி | 2019-02-11 17:51:34

பகிடி வதை யாழ்.பல்கலை மாணவர்கள் வகுப்பு பகிஸ்கரிப்பில்

பாறுக் ஷிஹான்  

யாழ்.பல்கலைக்கழக் முதலாம் வருட மாணவர்கள் வகுப்பு பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 பல்கலைக்கழக மாணவனும், ஊடகவியலாளருமான ப.சுஜீவன்  நேற்று(7) வியாழக்கிழமை  பல்கலைக்கழக 4 ஆம் மாணவர்களால் சரமாரியாக தாக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மாணவன் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க கோரியும் யாழ்.பல்கலைக்கழக முதலாம் வருட மாணவர்கள்  இன்று (8)வெள்ளிக்கிழமை அடையாள வகுப்பு பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளானவரை  பல்கலைக்கழக வளாகத்திற்குள் வெளியில் வைத்து  நேற்று  பின்தொடர்ந்த பல்கலைக்கழ நான்காம் வருட மாணவர்கள் அவரை மோட்டார் சைக்கிலில் ஏற்றிச் செல்ல முற்பட்டிருந்ததுடன் வீதியில் பொது மக்களின் போக்குவரத்து அதிகமாக இருந்த காரணத்தினால் அம்மாணவனை நான்காம் வருட மாணவர்களால் கூட்டிச் செல்ல முடியவில்லை. இந்நிலையில்    மாணவனை சூழ்ந்த நான்காம் வருட மாணவர்கள் அவர் மீது சரமாரி தாக்குதலை நடத்தி தப்பி சென்றுள்ளனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts