பிராந்தியம் | கல்வி | 2023-10-14 07:00:10

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை ஆசிரியர்தின நிகழ்வு!

நூருல் ஹுதா உமர்

கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது சாஹிரா கல்லூரியின் (தேசிய பாடசாலை) ஆசிரியர்தின நிகழ்வுகளின் பிரதான வைபவம் பாடசாலை எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் அதிபர் எம். ஐ.ஜாபிர் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக கல்லூரியின் பழைய மாணவரும், கல்வி அமைச்சின் தேசிய பாடசாலைகளின் இடமாற்றப்பிரிவின் பிரதிக் கல்விப் பணிப்பாளருமான எம்.எப்.எம். சர்ஜூன் அவர்கள் கலந்து கொண்டதுடன் விஷேட அதிதியாக பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் செயலாளர் டாக்டர் எம்.எச். சனூஸ் காரியப்பர் அவர்களும் பெற்றோர் சார்பான பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவினரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் ஆசிரியர்களின் பல கலைநிகழ்வுகள் நடைபெற்றதுடன் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவினரால் ஆசிரியர்கள் நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts