பிராந்தியம் | சமூக வாழ்வு | 1970-01-01 05:30:00

கல்முனையில் மூத்த கலைஞர்கள் கௌரவிப்பும் 'கலை வாசல்' சிறப்பு மலர் வெளியீடும்

​​​​​​றாஸிக் நபாயிஸ்,ஏ.எல்.எம்.ஷினாஸ்,

ஜெஸ்மி எம் மூஸா,மருதமுனை நிஸா

வீடமைப்பு நிர்மாணம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அனுசரணையுடன் கல்முனை கலாசார மத்திய நிலையம் நடாத்திய 'முனைமகுடம'; மூத்த கலைஞர்கள் கௌரவிப்பு விழாவும் 'கலை வாசல்' சிறப்பு மலர் வெளியீட்டு நிகழ்வும் பிரதேச செயலாளர் எம்.எம்.முகம்மட் நஸீர் தலைமையில் கல்முனை கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சட்டத்தரணி ஏ.எம் அப்துல் லத்தீப்; பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக பி.எம்.நிலோபர் கலந்து கொண்டார்கள். இதன் போது பிரதேசத்தின் மூத்த எம்.வை.எம்.மனாப், எஸ்.ஐ.முஹம்மது முஸ்தபா, எஸ்.எல்.ஸாபிறா உம்மா, ஏ.எல்.சக்கரிய்யா லெப்பை, பி.எம்.முஹம்மது ஷரீப், ஏ.வி.எம்.மஃதூம், எம்.சித்தி றபீக்கா, ஏ.எல்.இப்றாலெப்பை, ஏ.அப்துல் ஹமீட் (தோழர் இஸ்மாயில்), எம்.எச்.எம்.அப்துல் காதர், ஏ.எம்.ஹூஸைன், ஐ.எல்.நெய்னா முஹம்மட், ஐ.எல்.எம்.றபீக் ஆகிய 15 மூத்த கலைஞர்கள் பொன்னாடை போத்தி விருதுவழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
 
கலாசார மத்திய நிலையத்தின் நிலையப் பொறுப்பதிகாரி ஜ.எல்.றிஸ்வான் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலக்கிய ஆர்வலர்கள், கல்வியலாளர்கள், ஊர் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்

கலைச் சேவைக்குநிகழ்வின் போது கலாசார மத்திய நிலையத்தின் அபிவிருத்தி குழுவினர் 18  பேர்களுக்கும் விருதுகள் வழங்கி கொளரவிக்கப்பட்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts