விளையாட்டு | விளையாட்டு | 2023-10-03 07:09:00

மாகாண மெய்வல்லுனர் போட்டியில் வெற்றி ஈட்டிய மாணவர்கள் கௌரவிப்பு!

நூருல் ஹுதா உமர்

கல்முனை கல்வி வலய கல்முனை கமு/கமு/ அல்- பஹ்ரியா மகா வித்தியாலயத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கிழக்கு மாகாண பாடசாலை மெய்வல்லுனர் போட்டியில் கலந்து கொண்டு வெற்றியீட்டி தேசிய மட்ட பாடசாலை மெய்வல்லுனர் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை முதல்வர் எம்.எஸ்.எம். பைசால் தலைமையில் பாடசாலையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் பிரதி அதிபர்கள் ,பகுதி தலைவர்கள், ஆசிரியர்கள் ஒன்றிணைந்து பாடசாலை முன்றலில் வைத்து வெற்றியீட்டிய மாணவர்களுக்கு மாலைகள் அணிவித்து, பதக்கங்கள் அணிவித்து பாடசாலைக்கு அழைத்து வந்து பாராட்டி கௌரவித்தனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts