( ஏ.எல்.எம்.ஷினாஸ்)
கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் உள்ள பாடசாலைகளுகிடையிலான பெரு விளையாட்டு போட்டிகள் தற்போது கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல்நஜீம் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய கல்முனையில் நடைபெற்று வருகிறது.
கடந்த இரு தினங்களாக நடைபெற்று வரும் கல்முனை வலய பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியில் இறுதிப் போட்டிக்கு நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை அணியும் கல்முனை ஸாஹிரா கல்லூரி (தேசிய பாடசாலை) அணியும் தெரிவாகி இருந்தது. இறுதிப்போட்டி கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை விளையாட்டு மைதானத்தில் (16) நடைபெற்றது.
அணிக்கு 11 பேர் கொண்ட 5 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியாக இடம் பெற்ற இப்போட்டியின்
இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பிடித்தானிய கல்முனை ஸாஹிரா கல்லூரி அணி 5 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 46 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. வெற்றி இலக்கு 47 எனும் நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை அணியினர் 5 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 38 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொள்ள 8 மேலதிக ஓட்டங்களால் கல்முனை ஸாஹிரா கல்லூரி அணி கல்முனை வலய கிரிக்கெட் சாம்பியன் அணியாக தெரிவாகியது.
மாணவர்களுக்கு பயிற்சி வழங்கிய உடற்கல்வி ஆசிரியர் ஏ.எம்.அப்ராஜ் றிழா, பாடசாலை அதிபர் எம்.ஐ.ஜாபிர், பிரதி அதிபர், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வெற்றிக்கு பக்க பலமாக செயல்பட்ட அனைவருக்கும் கல்வி சமூகத்தினர் நமது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.