விளையாட்டு | விளையாட்டு | 2019-04-16 13:05:31

ஆரம்ப போட்டியில் மருதமுனை கோல்ட் மைன்ட் அணி அபார வெற்றி.

(ஏ. எல்.எம்.ஷினாஸ்)     

மருதமுனை யுனிவர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையோடு அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்தும் அமைச்சர் றிஷாத் பதியுத்தீன் வெற்றிக் கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் ஆரம்பநாள் நிகழ்வும் முதலாவது போட்டியும்  மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில்(12) நடைபெற்றது.

ஆரம்பநாள் நிகழ்வுக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மயில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சுற்றுப் போட்டியை ஆரம்பித்து வைத்தார்.

ஆரம்பப் போட்டியில் மருதமுனை கோல்ட் மைன்ட் மற்று மருதம் விளையாட்டுக் கழகம் ஆகியன ஒன்றை ஒன்று எதிர்த்து விளையாடியது.  இந்தப் போட்டியில் கோல்ட் மைன்ட் விளையாட்டுக் கழகம் தமது அபார திறமையை வெளிக்காட்டினார்கள். மருதம் விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக 08 கோல்களை போட்டு (08-00) எட்டுக்குபூச்சியம் என்ற கோல் வித்தியாசத்தில் கோல்ட் மைன்ட் அபார வெற்றிபெற்றது.

இச் சுற்றுப்போட்டியில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மவட்டங்களில் இருந்து 16  அணிகள்  பங்குபற்றவுள்ளன.  

ஆரம்ப நாள் நிகழ்வில் கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜெலீல், அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளரும் மாநகர சபை உறுப்பினருமானஎம்.ஐ.எம்.மனாப்,மாநகர சபை உறுப்பினர்களான எம்.எஸ்.உமர் அலி, ஏ.ஆர்.அமீர், சுற்றுப் போட்டிக் குழு தவிசாளர் அப்பாஸ் எம்.நியாஸ், யுனிவர்ஸ் வி.கழகத்தின் தலைவரும் கணக்காளருமான றிஸ்வி யஹ்ஸர்,செயலாளர் ஏ.எம்.எம்.ரஜி உட்பட பலர் கலந்துகொண்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts