(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
நிந்தவூர் பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கிடையிலான விளையாட்டு விழா அண்மையில் (10) நிந்தவூர் தென்னம் தோப்பு வளாகத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
மஞ்சல், சிவப்பு, நீலம் ஆகிய மூன்று இல்லங்கள் அமைத்து விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆண்கள் -பெண்கள் என இருபாலாரும் அதிக ஆர்வத்துடன் நிகழ்சிகளில் கலந்து கொண்டனர்.
நிந்தவூர் பிரதேச செயலகத்தை உற்பத்தித் திறன் நிகழ்சித் திட்டத்திற்கு தயார்படுத்தும் நோக்கத்தோடு இந்த விளையாட்டு விழா நடைபெற்றதாக நிகழ்வுக்கு தலைமை தாங்கி உரையாற்றிய பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப் தெரிவித்தார்.
போட்டி நிகழ்ச்சிகளில் 72.74 புள்ளிகளை பெற்று மஞ்சல் இல்லம் முதல் இடத்தினை பெற்று சம்பியனாக தெரிவானது. 63.65 புள்ளிகளுடன் சிவப்பு இல்லம் இரண்டாம் இடத்தினையும், 62.16 புள்ளிகளுடன் நீல நிற இல்லம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டது.
இவர்களுக்குரிய வெற்றி கேடயங்களை பிரதம அதிதிகளாக கலந்து கொண்ட அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல் பண்டாரநாயக, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம் ஹனீபா ஆகியோர் வழங்கிவைத்தனர்.
இதேவேளை நிந்தவூர் பிரதேச செயலகத்தில் கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச் சென்ற 60 உத்தியோகத்தர்கள் இங்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். அதிதிகள் பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் பொன்னாடை போத்தி நினைவுச்சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்
இந்த நிகழ்வில் பிரதேச செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் என அனைவரும் தமது குடும்ப உறவுகளுடன் கலந்து கொண்டமை பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.