[ஊடகப் பிரிவு]
ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நேற்று வெள்ளிக்கிழமை (2019.02.15) இடம்பெற்றது இதில் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.
அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தின் அதிபர் யு.கே.அப்துர் ரஹீம் தலைமையில் பாடசாலை மைதானத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.நஸீர் கெளரவ அதிதியாகவும் அதிதிகளாக அட்டாளைச்சேனை பிரதேச தவிசாளர் ஏ.எல்.அமானுள்ளாஹ், அக்கரைப்பற்று வலயக்கல்வி பிரதிக் கல்வி பணிப்பாளார் ஏ.ஜீ.பஸ்மில், லக்கீ பெக் உரிமையாளர் தொழிலதிபர் ஏ.எல்.சஹீட், ஒலுவில் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் ஐ.எல். ஜஹதர் அலி, பிரதேச சபை உறுப்பினர்களான எம்.எஸ்.அமீன், ஏ.எல்.ஹம்ஸா, ஆப்தீன், பிரதேச பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் ஸபா (பச்சை நிறம்) இல்லம் இவ்வருடத்தின் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.இரண்டாம் இடத்தை அறபா (நீலம் நிறம்) இல்லமும், மூன்றாம் இடத்தை மர்வா (மஞ்சல் நிறம்) இல்லமும் பெற்றுக்கொண்டன.
இதன்போது பாடசாலையில் கடமையாற்றி ஒய்வு பெற்ற ஆசிரியர்கள், அதிபர்கள் பென்னாடை பொர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவுக்கப்பட்டதுடன் இராஜாங்க அமைச்சரும் கெளரவுக்கப்பட்டார்.