கல்முனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தின் 2019 வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி பாடசாலையின் அதிபர் திருமதி வி.நந்தபாலா தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மாணவர்களின் அணிநடை நிகழ்வு ஒட்டப்போட்டி வினோத உடை போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றதுடன் இறுதியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.