கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான செய்திகளை களத்தில் நின்று வழங்கும் பிராந்திய ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் முகமாக சிலோன் மீடியா போரம் 'ஊடகவியலாளர்களைப் பாதுகாப்போம்' எனும் வேலைத்திட்டத்தின் ஊடாக முககவசம் (குயஉந ஆயளம) வழங்கும் நிகழ்வு இன்று (23) திங்கட்கிழமை சாய்;ந்தமருதிலுள்ள சிலோன் மீடியா போரத்தின் தலைவர் இல்லத்தில் இடம்பெற்றது.
சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ, மஜீத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வீதி அபிவிருத்தி தினணக்கள பொறியியலாளரும் உலக வங்கியின் மாகாண வீதி அபிவிருத்தி திட்ட உதவி வதிவிட பொறியியலாளரும் பட்டய பொறியியலாளருமான எம்.எம்.எம். முனாஸ் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் சிலோன் மீடியா போரத்தின் பணிப்பாளர்களான தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை, கலாசாரப் பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர், அம்பாறை மாவட்ட கட்டடங்கள் திணைக்கள பிரதம பொறியியலாளர் ஏ.எம்.ஸாஹிர், அமைப்பின் செயலாளர் ஏ.எஸ்.எம்.முஜாஹித்;, பிரதித் தலைவர் எஸ்.அஷ்ரஃப்கான் உள்ளிட்ட மாவட்ட ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது மாவட்டத்திலுள்ள ஊடகவியலாளர்களுக்கு அதிதிகளால் முககவசம் அணிந்து விடப்பட்டது.