உள்நாடு | சமூக வாழ்வு | 2020-02-16 18:07:21

எழுத்தாளர் வஹாப்தீனின் 'தோறாப் பாடு' நாவலுக்கு விருது

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தினால் Pirai F.M.அறிவிப்பாளர்  கலைப்பிறை J.வஹாப்டீன் அவர்களின் " தோறாப்பாடு" நாவலுக்கு வழங்கப்பட்ட இந்தியாவின் திருப்பூர் இலக்கிய விருதை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை 
(16-02-2020) ஒலுவில் அல்ஹம்றா வித்தியாலயத்தில் அட்டாளச்சேனை பிரதேச செயலாளர் J. லியாக்கத் அலி தலைமையில் இடம்பெற்றது. 
தென்கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் M.M.M. நாஜிம் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்த நிகழ்வில் 
தென்கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீடாதிபதி Dr.U.L. அப்துல் மஜீட் கெளரவ அதிதியாகவும், பேராசிரியர் S.யோகராசா, பேராசிரியர் றமீஸ் அப்துல்லா, ஆகியோர் முதன்மை அதிதிகளாகவும், உலகக் கவிஞர் சோலைக்கிளி அத்தீக் அவர்கள் இலக்கிய அதிதியாகவும் கலந்து கொண்டனர்.Pirai.
F.M வானொலி சார்பாகவும் கவிஞர் வஹாப்டீன் அவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது. அட்டாளைச்சேனை பிரதேச செயலக கலாச்சார அதிகார சபையினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 
நன்றி உரையை Pirai. F.M.அறிவிப்பாளர் எம்.ஏ. றமீஸ் நிகழ்த்தினார். கலைப்பிறை J. வஹாப்தீன் எழுதிய " வெயிலில் ஒரு வீரப்பழம்" நூலும் வெளியீட்டு வைக்கப்பட்டது. நூல் நயவுரை நிகழ்த்தினார் கலாநிதி Haniffa Ismail சேர் அவர்கள்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts