கிண்ணியா உப்பாறு பாலத்துக்கு அருகில் இன்று (08) படகு கவிழ்ந்ததில் படகில் பயணித்த ஐந்து பேரில் புல்மோட்டை பகுதியைச் சேர்ந்த இக்பால் இல்ஹாம் (வயது 16) என்பவர் சம்பவம் நடைபெற்ற தினத்தன்று உயிரிழந்த நிலையில் மேலும் இருவர் காணாமல் போயிருந்தனர்.
காணமல் போன கிண்ணியாவை சேர்ந்த முஹம்மட் காமில்(39), சாஹிர்(29) ஆகிய இருவரையும் தேடும் பணிகளில் இலங்கை கடற்படை ,அனர்த்த முகாமைத்துவ நிலையம் , பொலிசார் கடற்படையினருக்கு ஒத்துளைப்பாக 1990 அவசர சேவை மற்றும் பொதுமக்கள் இணைந்து மேற்கொண்டு வந்தனர்.
இன்னிலையில் காணாமல் போன இருவரினதும் சடலங்கள் இன்று (10) கிண்ணியா கடற்படை முகாமிற்கு அண்மித்த பகுதியில் கரையோதிங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் முஹம்மட் ஆதிர் (19), சரவணமுத்து கஜேந்திரன்(33) ஆகியோர் கரையேறியபோது மீனவர்களால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.