(கிண்ணியா செய்தியாளர்)
கிண்ணியா உப்பாறு பாலத்துக்கு அருகில் இன்று (08) படகு கவிழ்ந்ததில் படகில் பயணித்த ஐந்து பேரில் புல்மோட்டை பகுதியைச் சேர்ந்த இக்பால் இல்ஹாம் (வயது 16) என்பவர் மரணமடைந்துள்ளார். மேலும் இருவர் காணாமல் போயுள்ளனர்.
உயிரிழந்தவரின் ஜனாஸா தற்போது கிண்ணியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவத்தில் முஹம்மட் ஆதிர் (19), சரவணமுத்து கஜேந்திரன்(33) ஆகியோர் கரையேதிங்கிய நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காணமல் போன கிண்ணியாவை சேர்ந்த முஹம்மட் காமில்(39), சாஹிர்(29) ஆகிய இருவரையும் இருவரை தேடும் பணிகளை இலங்கை கடற்படை , அனர்த்த முகாமைத்துவ நிலையம் , பொலிசார் கடற்படையினருக்கு ஒத்துளைப்பாக 1990 அவசர சேவை மற்றும் பொதுமக்கள் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்தவர் கிண்ணியா குறிஞ்சாக்கேணி அறபா மகா வித்தியாலயத்தில் இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதி வருவதாகவும் இன்று விடுமுறை தினம் என்பதால் இத்தினத்தினை கழிப்பதற்கு நண்பர்களுடன் வயல் காவலுக்கு சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலதிக விசாரணைகளை கிண்ணியா போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.