(ஏ.எல்.எம்.ஷினாஸ் )
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் புதிய அமைப்பாளர்கள் (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஸ்ரீ சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டனர்.
இதன் போது அம்பாறை மாவட்டம் முஸ்லிம் பிரதேசங்களுக்கான அமைப்பாளராக பி.சர்மில் ஜாஹான் அவர்கள் நியமனத்தைப் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சரியானி விஜேவிக்ரம , கட்சியின் செயலாளர் ஜயசறி ஜயசேகர, முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லா மற்றும் கிழக்கு மாகாண அமைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.