உள்நாடு | குற்றம் | 2019-05-17 23:34:15

ஹொரவபொத்தானயில் கைது செய்யப்பட்ட இருவரையும் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவன சஹ்ரான் ஹகசீமுடன் நெருங்கிய தொடர்பினை வைத்திருந்த 2 சந்தேகநபர்களையும் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது. 

கெப்படிகொல்லாவ மாவட்ட நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார். 

சஹ்ரான் ஹகசீமுடன் நெருங்கிய தொடர்பினை வைத்திருந்த 2 சந்தேகநபர்கள் நேற்று இரவு ஹொரவபொத்தான பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர். 

விசேட அதிரடிப்படையினரால் குறித்த நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கைது செய்யப்பட்டுள்ள இருவரும் ஹொரவபொத்தான பகுதியில் அமைந்துள்ள முஸ்லிம் பாடசாலைகளின் அதிபர் மற்றும் பதில் அதிபர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

ஹொரவபொத்தான, வீரசோலை, பத்தேவ பகுதியில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டனர்


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts