( நூருல் ஹுதா உமர். )
உலகில் ஆகக்கூடிய சம்பளம் யாருக்கு கொடுக்கப்பட வேண்டும் என்றால் அது பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்குத்தான் என்று நான் சொல்வேன். ஏன் என்றால் எமது குழந்தைகளின் ஆரம்பமே அங்கேதான் தொடங்குகிறது. அவர்கள் ஒரு ஆசிரியராக மாத்திரமல்லாமல், ஒரு தாயாக, ஒரு வைத்தியராக, ஒரு சமூக சேவகராக இருந்து எமது குழந்தைகளின் ஆரம்பத்தினை தொடக்கி வைக்கின்றார்கள் என கிழக்கின் கேடயம் பிரதானியும், அக்கறைப்பற்று மாநகரசபை முன்னாள் உறுப்பினருமான, கிழக்கு மாகாண பள்ளிவாசல்கள் சம்மேளன நிறைவேற்று சபை உறுப்பினருமான எஸ். எம். சபீஸ் தெரிவித்தார்.
பாலமுனை ஹில்ப் சமூக சேவை மன்ற பாலர் பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டிகள் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதீதியாக எஸ் எம் சபீஸ் அவர்கள் கலந்துகொண்டிருந்த போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர்,