பிராந்தியம் | சமூக வாழ்வு | 2023-08-13 06:14:49

அல்- குர்ஆனை ஓதி முடித்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் பங்கேற்பு

(நூருல் ஹுதா உமர்)

புதிய காத்தான்குடி அல்-அக்ஸா ஜூம்ஆ பள்ளிவாயலின் கீழ் இயங்கும் குர்ஆன் மதரஸாவில் புனித அல்-குர்ஆனை ஓதி முடித்து பரிட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன் மாணவர்களுக்கான சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.

அல்-அக்ஸா பெரிய பள்ளிவாயலின் தலைவர் கே.எல்.எம்.பரீட் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் காத்தான்குடி  நகரசபை முன்னாள் உறுப்பினர் முகம்மது ஜவாஹிர், குர்ஆன் மத்ரஸாக்கள் அபிவிருத்தி ஒன்றியத்தின் உறுப்பினர்கள், உலமாக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts