இம் மாதம் 10ஆம் திகதி முதல் ஐதராபாத்தில் இருந்து மதுரை வழியாக கொழும்புக்கு விமான சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நாளை மறுநாள் முதல் வருகிற 19 ஆம் திகதி வரை ஸ்பைஸ் ஜெட்-2705 விமானம் ஐதராபாத்தில் இருந்து தினமும் காலை 10.35 மணிக்கு புறப்பட்டு மதுரை விமான நிலையத்திற்கு பகல் 12.15 மணிக்கு சென்று. பின்னர் அதே விமானம் மதுரையிலிருந்து பிற்பகல் 1.15 மணிக்கு புறப்பட்டு 2.25 மணிக்கு கொழும்பை வந்தடையவுள்ளது.
அதே போல் கொழும்பில் இருந்து பிற்பகல் 3.25 மணிக்கு புறப்பட்டு 4.35 மணிக்கு மதுரை விமான நிலையத்தை சென்றடைந்து பின்னர் மதுரையில் இருந்து மாலை 5.25 மணிக்கு புறப்பட்டு இரவு 7.25 மணிக்கு ஐதராபாத் சென்றடையும் என ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
பயணிகள் ஆதரவை பொறுத்து இதே நிலை நீடிக்கும் என ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் தெரிவித்துள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.