உள்நாடு | விளையாட்டு | 2023-05-07 11:25:39

மருதமுனை ஈஸ்டன் யூத் விளையாட்டு கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

மருதமுனை ஈஸ்டன் யூத் விளையாட்டு கழகத்திற்கு தேவையான விளையாட்டு உபகரணங்களை அன்பளிப்பாக வழங்கி வைக்கும் நிகழ்வு கழகத்தின் தலைவர் எம்.எச்.எம்.றிஸ்வி தலைமையில் மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதான கேட்போர் கூட மண்டபத்தில் (06) நடைபெற்றது.

விளையாட்டு கழகத்தின் ஆரம்பகால அபிமானியும் தொழிலதிபருமான எம்.ரி. அஜமல் பிரதம அதிதியாக கலந்து கொண்டு விளையாட்டு கழகத்திற்கு தேவையான காலணிகள் மற்றும் உதைபந்துகளை கழகத்தின் உப தலைவர் சுஹைல் ஜமால்த்தீனிடம் அன்பளிப்பாக கையளித்தார்.

இந்த நிகழ்வில் கழகத்தின் செயலாளர் எச்.எம். தாரிக், பொருளாளர் ஏ.எம்.எம்.இப்றாஹீம், முன்னாள் பொதுச் செயலாளர் ஏ.எம். இப்றாஹீம் உட்பட கழக உயர் பீட உறுப்பினர்கள், விளையாட்டு வீரர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts