பிராந்தியம் | சமூக வாழ்வு | 2023-05-04 06:04:41

கல்முனை வடக்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் புதிய தலைவராக ஊடகவியலாளர் இராசையா ஸ்ரீவேல்ராஜா

(பாறுக் ஷிஹான்)

கல்முனை வடக்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின்  புதிய தலைவராக ஊடகவியலாளரும் வங்கியாளருமான  இராசையா ஸ்ரீவேல்ராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார் .

கடந்த சனிக்கிழமை  (29.04.2023) அன்று இடம்பெற்ற புதிய இயக்குனர் சபை தெரிவின்போதே இவர் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் .

மேலும்  இதன் உப தவைராக இராஜகோபால் நடராஜா தெரிவு செய்யப்பட்டதுடன்  இவர்களைத் தவிர ஏழு பேர் கொண்ட இயக்குனர் சபை உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

 முன்னாள் தலைவர் சுப்பிரமணியம் அரசரெத்தினம்,  மார்க்கண்டு லோகராஜா , கிருஷ்ணபிள்ளை நாகராஜா,  அன்புமணி ராஜினி,  நிபோஜனா பற்மராஜா,   தவராஜா வினிதா  , குணரெட்னம் கேதீஸ் , ஆகியோரும்  தெரிவு செய்யப்பட்டனர் .


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts