பிராந்தியம் | சமூக வாழ்வு | 2023-04-19 04:20:23

மாபெரும் அல் குர்ஆன் மனனப்போட்டி பரிசளிப்பு விழா, மூத்த உலமாக்கள் கௌரவிப்பு மற்றும் கதீஸ் மஜ்லிஸ் நிறைவு நிகழ்வு!

புனித ரமழான் மாதத்தை சிறப்பிக்கும் முகமாக நிந்தவூர் கதீப் பேஷ் இமாம் சம்மேளன சமூக சேவைகள் அமைப்பினால் நடாத்தப்பட்ட
பகுதி நேர அல் குர்ஆன் மனன கலாபீட மாணவர்களுக்கிடையிலான மனனப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா சம்மேளனத்தின்  தலைவர் அஷ்ஷேக் மௌலவி எம்.ஏ.சீ.எம். அப்துர் ரஹ்மான் (ஸஃதி) தலைமையில் செவ்வாய்க்கிழமை (18)
நிந்தவூர் ஹாசிமியா பள்ளிவாசலில்  இடம்பெற்றது. 

இதில் பிரதம அதிதிகளாக திகாமடுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பைசால் ஹாசிம் நிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எம். அப்துல் லதீப் மற்றும் நிந்தவூர் பிரதேச செயலக சமூக சேவைகள் உத்தியோகத்தர் ஏ.எல் பைஸாத் ஆகியோர் கலந்துகொண்டு போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்களை வழங்கி வைத்ததுடன் மூத்த உலமாக்களும் கௌரவிக்கப்பட்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts