உள்நாடு | சமூக வாழ்வு | 2023-04-18 10:09:05

​மருதமுனை நேஷனல் விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்த விசேட இப்தார்   நிகழ்வு

(​ஏ.ஆர்.நபாயிஸ் , ஏ.எல்.எம்.ஸினாஸ்)

மருதமுனை நேஷனல் விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்த விசேட இப்தார்   நிகழ்வு கழகத்தின் தலைவர் எஸ். றுபைதீன் தலைமையில் மருதமலை FourA Rest Inn விடுதி மண்டபத்தில் நடைபெற்றது.

இப்தார் விசேட மார்க சொற்பொழிவை அஷ்ஷெய். ஏ.ஆர்.எம்.கியாஸ் மௌலவி​​ நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட கால்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் வை. கே.றஹ்மான், செயலாளர் எம்.ஐ. அப்துல் மனாப் உட்பட கழகத்தின் ஸ்தாபக தலைவர் நளீம்.எம்.பதுறுத்தீன், முகாமையாளர் எம்.ஏ.பரீஸ், பொருளாளர்
ஏ.எம்.றனீஸ், செயலாளர் எம்.ஏ.எம்.றைஹான் மற்றும் கழக உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts