உள்நாடு | சமூக வாழ்வு | 2023-04-12 05:48:29

புத்தாண்டை முன்னிட்டு மேலதிகமாக 300 பஸ்கள்!

தமிழ்-சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்த பிரதேசத்திற்கு செல்லும் மக்களுக்கான விசேட போக்குவரத்து சேவைகள் தற்போது நடைமுறையில் உள்ளன.

அதன்படி நாளாந்தம் இயங்கும் இ.போ.ச பஸ்களின் எண்ணிக்கைக்கு மேலதிகமாக 300 பஸ்களை சேர்க்க இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இது எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் இயங்கும் என்றும் புத்தாண்டு தினத்தன்று பயணிகளின் தேவைக்கு ஏற்ப பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts