பிரித்தானிய தம்பதியிடமிருந்து இரண்டு வெளிநாட்டு கடவுச்சீட்டு மற்றும் சுமார் 40 இலட்சம் ரூபா பெறுமதியான பணத்தை திருடிய சந்தேகநபர் முறைப்பாடு கிடைத்த 24 மணித்தியாலங்களுக்குள் (07) கைது செய்யப்பட்டதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வஸ்கடுவ பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, இரண்டு வெளிநாட்டு கடவுச்சீட்டுகள், விசாக்கள், வங்கி அட்டைகள், கெமரா மற்றும் தங்க ஆபரணங்கள் படுக்கைக்கு கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் மற்றுமொரு நபருடன் இணைந்து பிரித்தானிய தம்பதியினரின் பணம் மற்றும் பொருட்கள் அடங்கிய பெட்டகத்தை திருடிவிட்டு, வெற்றுப் பெட்டகத்தை கடலில் வீசியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கைதான சந்தேகநபர் களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.