(றியாஸ் ஆதம்)
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் அரசாங்க வைத்தியசாலைகளில் மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவிவருகிறது.
இந்நிலையில் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அவசரத் தேவையாகவிருந்த ஒரு சில மருந்துப் பொருட்களை பொத்துவில் ஜெஸ்பா பாமசி உரிமையாளர் வழங்கியுள்ளார்.
குறித்த மருந்துப் பொருட்களை கையளிக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (21) வைத்தியசாலையில் இடம்பெற்றது. இதன்போது பதில் வைத்திய அத்தியட்சகர் எம்.ஐ.எம்.றகீமிடம் ஜெஸ்பா பாமசி உரிமையாளர் எம்.எச்.எம்.ஜெஸிருல் லாபி மருந்துப் பொருட்களை கையளித்தார்.
வைத்தியசாலை நலன்புரிச் சங்கத்தினர் விடுத்த
வேண்டுகோளுக்கிணங்க, பாமசி உரிமையாளர் தனது சொந்த நிதியில் இருந்து மேற்படி மருந்துப் பொருட்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு மருந்துப் பொருட்களை வழங்கி உதவி செய்த ஜெஸ்பா பாமசி உரிமையாளருக்கு வைத்தியசாலை நிருவாகத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.