கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் நிருவாகத் தெரிவும் இன்று (22.2.2023) கல்முனை நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
சகல சட்டத்தரணிகளும் பங்கேற்றிருந்த இக்கூட்டத்தில் 2023/24ம் ஆண்டுக்கான நிருவாகத் தலைவராக போட்டியின்றி சட்டத்தரணி எம்.றயிஸுல் ஹாதி,உப தலைவர்கள்: சட்டத்தரணி அன்ஸார் மௌலானா சட்டத்தரணி ஆரிகா காரியப்பர் சட்டத்தரணி என்.சிவரஞ்ஜித்
செயலாளராக சட்டத்தரணி ரொஷான் அக்தர்,
பொருளாளராக சட்டத்தரணி ஏ.ஜி.பிரேம் நவாத் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.