(கலாபூஷணம் பி.எம்.எம்.ஏ.காதர்)
பொருளாதார சிரமங்களை எதிநோக்கும் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கும்'கல்வி கற்றிட கரம் கொடுப்போம்' என்ற தொனிப்பொருளிளான வேலைத்திட்டம் மஹஓய பிரதேச செயலகப் பிரிவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சமூகப்பணிக்கு மருதமுனை பறக்கத் டெக்ஸ் பிறைவட் லிமிட்டட் நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.ஐ.ஏ.பரீட் ஒரு தொகை நிதியை மஹாஓய பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் என்.எப்.அய்மா நிஃமத்துல்லாவிடம் வழங்கினார்.
இந்த நிகழ்வின் போது பறக்கத் டெக்ஸ் பிறைவட் லிமிட்டட் நிருவாகப் பணிப்பாளர் முஸத்திக் ஜே முகம்மட் அவர்களும் இணைந்து கொண்டார்.