கலை இலக்கியம் | இலக்கியம் | 2022-02-09 23:06:21

அம்பாறை மாவட்டத்தில்  87 கலைஞர்களுக்கு 'சுவதம்' விருது வழங்கி கௌரவிப்பு

ஏ.எல்.எம்.ஷினாஸ், எம்.எஸ்.எம்.ஸாகிர்

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணை மற்றும் வழிகாட்டலில் அம்பாறை மாவட்ட செயலகம் அனைத்து பிரதேச செயலகங்களோடு இணைந்து ஏற்பாடு செய்திருந்த 'சுவதம்' கலைஞர் விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு என்பன அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் தலைமையில் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி.எம். றிம்சான் ஒருங்கிணைப்பில் அக்கரைப்பற்று பிரதேச செயலக மண்டபத்தில்  (08.02.2021) நடைபெற்றது.

ஒவ்வொரு பிரதேச செயலகங்களில் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட 87 கலைஞர்கள் இங்கு 'சுவதம்' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எம்.ஏ.டக்ளஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்த நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி. ஜெகதீசன், முன்னாள் மேலதிக அரசாங்க அதிபரும் நிந்தவூர் பிரதேச செயலாளருமான சட்டத்தரணி ஏ.எம். அப்துல் லத்தீப் ஆகியோரது சேவையை பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இந்த நிகழ்வில் தமிழ் மொழிமூலமான 13 பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள் மற்றும் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன் கலைஞர்களின் பாரம்பரிய கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெறன.

நிகழ்வின் இறுதியில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மாவட்ட செயலாளருக்கு நினைவுச் சின்னம், கலைஞர்களினால் வரையப்பட்ட ஓவியம் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டன.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts