உள்நாடு | சமூக வாழ்வு | 2022-02-04 15:56:35

கல்முனை அல் பஹ்ரியா தேசிய பாடசாலையில் இலங்கையின் 74வது சுதந்திர தின விழா


(சர்ஜுன் லாபீர்)

இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின்
74வது சுதந்திர தின விழா கல்முனை அல் பஹ்ரியா தேசிய பாடசாலையில் இன்று(4)  பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம் பைசால் தலைமையில் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது.



இந் நிகழ்வில் ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் கீழ் மர நடுகை நிகழ்வு இடம்பெற்றது

மேலும் எமது நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த படைவீரர்கள் மற்றும் ஏனையவர்காளுக்காக 2 நிமிட மெளன பிராத்தனையும் இடம்பெற்றது.

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம் ஜிப்ரியின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி கலந்து கொண்டு தேசிய கொடியேற்றி வைத்ததோடு சுதந்திர தன் சிறப்பு சொற்பொழிவினையும் நிகழ்த்தினார்.

மேலும் இந் நிகழ்வில் கல்முனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் கே.எல் யாஸீன் பாவா,பாடசாலையின் பிரதி,உதவி அதிபர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு செயலாளர் ஐ.எல் ஹமீட் ,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,கிராம உத்தியோகத்தர்கள், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts