Sijas ABM
🚨காலி – பூஸா வெல்லப்பட பகுதி ரயில் கடவையூடாக கடந்த முச்சக்கர வண்டியை ரயில் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று முற்பகல் 10.45 மணியளவில் அளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு நோக்கி பயணித்த ரயில், குறித்த முச்சக்கரவண்டியை மோதுண்டுள்ளது.
காலி பகுதியைச் சேர்ந்த தாய், தந்தை, மகள் மற்றும் மருமகள் ஆகியோர் முச்சக்கர வண்டியில் பயணித்தனர். மூவர் சம்பவ இடத்தில் பலியானதுடன். மற்றைய ஒருவர் காயமடைந்த நிலையில் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்துள்ளார்.