உள்நாடு | குற்றம் | 2022-02-01 09:47:25

காரைதீவு பிரதான வீதியில் துப்பாக்கிச் சூட்டு !

Sijas ABM

காரைதீவு பிரதான வீதியில் குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டவர் பயணித்த கார் மீது துப்பாக்கிச் சூடு - கார், மோட்டார் சைக்கிளை கைவிட்டு விட்டு சந்தேக நபர்கள் தப்பியோட்டம் !!

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காரைதீவு பிரதான வீதியில் வெட்டுவாய்க்காலுக்கு அருகில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

2022.01.31 இரவு 11.00 மணி அளவில்  அக்கரைப்பற்றில் இருந்து கல்முனை நோக்கி கார் ஒன்றில் குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் பயணித்துக்கொண்டிருந்த போது அவர்களை கைது செய்யும் பொருட்டு பொலிசார் பின் தொடர்ந்துள்ளனர் 

இந்நிலையில் மோட்டார் சைக்கிளில்  பின் தொடர்ந்த ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கி சுட்டில் குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டோர் பயணித்ததாக கருதப்படும் கார் இலக்காகி உள்ளதுடன்,   சம்பந்தப்பட்ட நபர்களும் அவ்விடத்தில் வாகனத்தை கைவிட்டு விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகி உள்ளனர்

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அவ்விடத்தைச் சுற்றி வளைத்துள்ளதுடன் தேடுதல் நடவடிக்கையையும் முன்னெடுத்துள்ளனர்

இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

மேலதிக விபரம் விரைவில் ....


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts