உள்நாடு | இலக்கியம் | 2022-01-27 18:19:37

'நெஞ்சில் பூத்த நெருப்பு' கவிதை நூல் கல்முனை முதல்வரிடம் கையளிப்பு

(அஸ்லம் எஸ்.மௌலானா)

பல்துறைக் கலைஞர் மருதூர் என்.எம்.அலிக்கான் எழுதிய 'நெஞ்சில் பூத்த நெருப்பு' எனும் கவிதை நூலின் சிறப்பு பிரதியொன்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களுக்கு இன்று நூலாசிரியரினால் வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது முதல்வர் ஏ.எம்.றகீப் அவர்கள், நூலாசிரியர் அலிக்கான் அவர்களின் கவிப் புலமையைப் பாராட்டியதுடன் மேலும் பல படைப்புகளை வெளிக்கொணர வேண்டுமென வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

மாநகர முதல்வர் செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது மாநகர சபையின் கீழுள்ள நூலகங்களுக்கான பிரதிகளும் நூலாசிரியரினால் கையளிக்கப்பட்டன.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts